1. Home
  2. தமிழ்நாடு

சோலார் ஏற்படுத்திய சோகம்.. சேலம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

சோலார் ஏற்படுத்திய சோகம்.. சேலம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!


சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர், கருமாபுரம் பகுதியில் உள்ள தனியார் பால் பண்ணையில் தரக்கட்டுப்பாட்டு பணியாளராக உள்ளார். இவரது மனைவி வாணி, அரசு மருத்துவமனையில், ஆற்றுப்படுத்துனராக பணிபுரிகிறார். இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று, களரம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு ரமேஷ் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இன்று அதிகாலை, பூட்டப்பட்டிருந்த ரமேஷின் வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட இப்பகுதி மக்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, வீட்டுக்குள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வாழப்பாடி தீயணைப்புத் துறையினர், வீட்டு உரிமையாளர் ரமேஷ் மற்றும் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு இப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், சோலார் பேட்டரி மூலம் ஏற்பட்ட மின் கசிவால், வீட்டிற்குள் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த விபத்தில், வீடு கட்டுவதற்காக பல ஆண்டாக சேமித்து வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம் ஆகி விட்டதாக ரமேஷ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like