1. Home
  2. தமிழ்நாடு

எஸ்.ஜே.சூர்யா பட நாயகிக்கு 40 வயதில் திருமணம்..!

1

எஸ்.ஜே.சூர்யாவின் தமிழ் திரைப்படமான அன்பே ஆருயிரே படத்தில் நிலாவாக அறிமுகமானவர் மீரா சோப்ரா.அதன் பிறகு மருதமலை, ஜாம்பவான், லீ போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபோது டெல்லி திரும்பிய அவர் தந்தையின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘சபத்’ படத்தில் நடித்தார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். 40 வயதான மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த மும்பை தொழிலதிபரான ரஷீத் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஜெய்ப்பூர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் வரும் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். திருமணத் தகவலை மீரா சோப்ரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

1

Trending News

Latest News

You May Like