தொடரும் சோகம் : சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 4 பேர் பலி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/3600e7590797a63035a51a3f0d0a3759.gif?width=836&height=470&resizemode=4)
சிவகாசி செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 7 அறைகள் தரைமட்டமாகின. இதுவரை 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.செங்கமலப்பட்டி விபத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருப்பதால், அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ",