1. Home
  2. தமிழ்நாடு

நடுத்தெருவில் உட்கார்ந்து... அமைச்சர் ஜெயக்குமார் செய்த காரியம்!? வைரல் வீடியோ!

நடுத்தெருவில் உட்கார்ந்து... அமைச்சர் ஜெயக்குமார் செய்த காரியம்!? வைரல் வீடியோ!


சென்னையில் நடுத்தெருவில் உட்கார்ந்திருந்த மாணவர்களுடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இணைந்து கேரம் போர்டு விளையாடிய காட்சி பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்ற அமைச்சர்களை காட்டிலும் ஒரு வித்தியாசமான டைப். கலகலப்பு, கேலி, கிண்டல், சீரியஸ் என பன்முக தன்மையாடு பழகுபவர். ஆனால், கட்சி நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளில் கறார் காட்டுவார்.

இந்த நிலையில், தனது ராயபுரம் தொகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல அமைச்சர் ஜெயக்குமார் தாயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, தெரு அருகே சிறுவர்கள் சிலர் தரையில் உட்கார்ந்து கொண்டு ஜாலியாக கேரம்போர்டு விளையாடி கொண்டிருந்தனர். அதைப் பார்த்த அமைச்சர் ஜெயக்குமாரும் குஷியாகி, அவர்களுடன் களத்தில் குதித்துவிட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது. அதை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்....

Trending News

Latest News

You May Like