அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்… நாடக நடிகைக்கு நேர்ந்த கொடுமை!
இரவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணின் அந்தரங்க பகுதியில் கை வைத்து பணப்பை பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாவில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர் நாடக ஒத்திகை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அமியா தாஸ் என்ற 40 வயது நபர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
உடலில் அந்தரங்க பகுதிகளில் கைவைத்த அவர் பின்னர் இளம்பெண்ணின் பணப்பையை பறித்து கொண்டு ஓடினார். அப்போது அந்தப் பெண் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்போர் தப்பியோடிய நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த அந்தபெண், தினமும் நாடக ஒத்திகை முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது அந்த நபர் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும், அப்போது லட்சியம் செய்யாததால் தற்போது இதுபோன்ற தவறாக நடந்து கொண்டதாகவும் கூறினார்.
newstm.in