1. Home
  2. தமிழ்நாடு

மலைவாழ் கிராம சிறுமியிடம் சில்மிஷம்.. ஊராட்சி மன்ற உறுப்பினர் அடாவடி செயல் !

மலைவாழ் கிராம சிறுமியிடம் சில்மிஷம்.. ஊராட்சி மன்ற உறுப்பினர் அடாவடி செயல் !


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஆதிவாசி கிராமங்கள் ஏராளமாக உள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அச்சிறுமி தனியாக இருக்கும்போது வடகாடு பஞ்சாயத்து அதிமுக உறுப்பினர் பிறைசொக்கர் பாலாஜி (29) என்பவர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதனை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மலைவாழ் கிராம சிறுமியிடம் சில்மிஷம்.. ஊராட்சி மன்ற உறுப்பினர் அடாவடி செயல் !

இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்துள்ளது. பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் பிறைசொக்கர் தலைமறைவானார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் பிறைசொக்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் சிகிச்சை முடிந்து போலீசார் கண்ணில் சிக்காமல் மீண்டும் தலைமறைவானார்.

மலைவாழ் கிராம சிறுமியிடம் சில்மிஷம்.. ஊராட்சி மன்ற உறுப்பினர் அடாவடி செயல் !

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு ஈரோடு பேருந்து நிலையத்தில் வைத்து அவரை மடக்கி பிடித்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அவரது ஊராட்சி மன்ற பதவியை மாவட்ட நிர்வாகம் பறிக்க வேண்டும். போக்சோ மற்றும்தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like