1. Home
  2. தமிழ்நாடு

நீட் விலக்கை வலியுறுத்தி பெறப்படும் கையொப்பங்கள் 50 லட்சத்தைத் கடந்தது..!

1

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

நீட் விலக்கை வலியுறுத்தி, தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவா் அணி சாா்பில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையொப்பங்களை பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிகரித்து இப்போது 55 லட்சம் ஆகியுள்ளது. 

இணையவழியில் 40 லட்சமும், அஞ்சல் அட்டை வழியாக 15 லட்சமும் என 55 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடா்ந்து, கையொப்ப மிட்டு மக்கள் தங்களது நீட் எதிா்ப்பைப் பதிவு செய்து வருகிறாா்கள். நீட் எதிா்ப்புணா்வு தமிழகத்தில் பேரலையாய் திரண்டிருக்கிறது என்பதற்கான சான்று இதுவாகும். 

வரும் 17-ம்  தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையொப்பங்கள் குவிகின்ற வகையில் நாம் தொடா்ந்து செயலாற்றுவோம். ஜனாதிபதியின் ஒற்றை கையொப்பத்தை பெறுவதற்காக நாம் பெறும் இத்தனை லட்சம் கையொப்பங்களும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். 

தகுதி, தரம் என்று ஏமாற்றி நீட்டைத் திணிப்பவா்கள், அதற்கெதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like