1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வேலைவாய்ப்பு : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்..!

1

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக அரசின் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சுமார் 2.40 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்த பட்ஜெட்டில் மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள், மூத்த குடிமக்கள் சார்ந்த திட்டங்கள், பள்ளிக் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான திட்டங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவருக்குமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன. ஓசூரில் 400 கோடி ரூபாய் செலவில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் மதுரை மற்றும் கடலூரில் 250 கோடி ரூபாய் செலவில் காலனி தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் ஒன்பது இடங்களில் 3566 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் எனவும் இதன் மூலம் 17,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like