பாமக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. மருத்துவமனையில் அனுமதி..!
கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமக நிர்வாகி சிவசங்கர். இவர் வன்னியர் சங்கத்தின் கடலூர் நகர தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சிவசங்கர் சரிந்துள்ளார். கழுத்து, வாய், முதுகு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். சிவசங்கரை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான முறையில் சிவசங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவசங்ககரை வெட்டியது யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
சிவசங்ககரை வெட்டியது யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.