1. Home
  2. தமிழ்நாடு

பிரேக்கப் குறித்து ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்!

1

 ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற போற்றிப் பாடடி பெண்ணே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் 2000-ம் ஆண்டு வெளியான ‘ஹே ராம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனார். பின்னர் 2011-ல் ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததை அடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷய், அஜித், விஷால், தனுஷ் போன்றோர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கணிசமான படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் அவருக்கு வாய்ப்பு குறைந்ததை அடுத்து, தெலுங்கு பக்கம் சென்று அங்கு கணிசமான படங்களில் நடித்து வருகிறார்.

Shruti Hasan

சமீபத்தில் ‘இனிமேல்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுத, பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் இசையமைத்திருந்தார். இசையமைத்ததோடு மட்டுமன்றி அதில் நடித்தும், பாடியும் இருந்தார். அவருடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இதில் நடித்திருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றதை தொடர்ந்து, அவர் தொடர்ந்து தனது இசை பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது, இவர்கள் தங்களின் காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் தங்கியிருந்த இவர்கள், தற்போது ஒன்றாக இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நடிகை ஸ்ருதிஹாசனும் ஹசாரிகாவும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்து கொண்ட இவர்கள், தாங்கள் ஒன்றாக இருந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி விட்டதால் இவர்களின் காதல் முறிவு உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.

Shruti-Hasan

இதுகுறித்து பொதுவெளியிலோ அல்லது சமூகவலைத்தலத்தில் ஸ்ருதி ஹாசன் எதுவும் கூறாமல் இருந்த நிலையில், முதன் முறையாக தற்போது தனது ப்ரேக்கப்பை அவரே உறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். அப்போது ரசிகர் ஒருவர் ஸ்ருதி ஹாசனின் ரிலேஷன்ஷிப் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த கேள்விக்கு பதிலளிப்பது தனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றாலும் தான் சிங்கிளாக இருப்பதாக கூறினார், வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், தன்னுடைய வேலையில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருவதாகவும்,  வாழ்க்கையில் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார்.

Trending News

Latest News

You May Like