1. Home
  2. தமிழ்நாடு

இதுக்கு மேலையும் திமுகவுடன் காங்கிரஸ் இருக்க வேண்டுமா ? அண்ணாமலை சரமாரி கேள்வி..!

1

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்குகில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை.ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சொத்துக்களை சேர்க்காமல் தனது கடைசி காலம் வரை எளிமையாக வாழ்ந்தவர் காமராஜர். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.

வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் திமுக, கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தியுள்ளனர். இதை நான் கண்டிக்கிறேன். இதற்காக காங். தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா? உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப் போட்டியிடத் தயாரா? கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என்பதை நான் மட்டுமல்ல.. சாதாரண மக்களும் கேட்கிறார்கள் என்றார்.

Trending News

Latest News

You May Like