1. Home
  2. தமிழ்நாடு

மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

1

மத்திய அரசு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ளவது 

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, Sadist BJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!

உலக அளவில் Crude Oil விலை சரிந்துள்ள நிலையில், Petrol Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் #GasCyclinder விலை உயர்வு அமைந்திருக்கிறது.

மக்களே... அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! மத்திய BJP அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like