இந்த 4 நாட்கள் சோளிங்கர் நரசிம்மர் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தம்..!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் மலை மீது அமைந்துள்ள யோக நரசிம்மர் கோவிலிற்கு வரும் பக்தர்கள், மலையில் படியேறி செல்ல முடியாத வயதான, கர்ப்பிணி மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டோருக்காக ரோப் கார் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்த பெற்ற யோக நரசிம்மசாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு 1,305 படிகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில், மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி ஏப்.21 -ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏப்.25ம் தேதி ரோப் கார் சேவை வழக்கம் போல் செயல்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.