1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைனில் ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..! ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்..!

1

தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையில் உணவுப் பொருள்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில்,மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்து, சாப்பிட்டுள்ளார்.அப்போது, அவர் நாக்கில் ஏதோ தட்டுப்படவே ஐஸ்கிரீமை உற்றுநோக்கிய பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்து. 

இதனை கண்டு அதிர்ந்த அந்த பெண் அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்தார். ஐஸ்கிரீம் மற்றும் விரலை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

1

Trending News

Latest News

You May Like