1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி ரிப்போர்ட்! இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்..!

1

நாடு முழுவதும் 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,61,648 பெண்கள், 2,51,430 சிறுமிகள் என 13.13 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதில், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டில் 82,084 சிறுமிகள் மற்றும் 3,42,168 பெண்களும், 2020-ல் 79,233 சிறுமிகள் மற்றும் 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளதாக அஜய் குமார் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, 2019-ம் ஆண்டில் நாடு முழுவதும் 82,619 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 49,436 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். 3,29,504 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 1,68,793 பேர் மீட்கப்பட்டனர். 2020-ல் 79,233 சிறுமிகளும் 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 2,24,043 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டில், 90,113 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 58,980 சிறுமிகள் மீட்கப்பட்டனர். 3,75,058 பெண்கள் காணாமல் போயுள்ளனர், 2,02,298 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Police

2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், மத்திய பிரதேசத்தில் 1,60,180 பெண்களும் 38,234 சிறுமிகளும், மேற்குவங்கத்தில் 1,56,905 பெண்களும் 36,666 சிறுமிகளும், மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும் 13,033 சிறுமிகளும் மாயமாகி உள்ளனர். அதேபோல், ஒடிசாவில் 70,222 பெண்களும் 16,649 சிறுமிகளும், சத்தீஸ்கரில் இருந்து 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும், டெல்லியில் 61,054 பெண்களும் 22,919 சிறுமிகளும், ஜம்மு காஷ்மீரில் 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. பாலியல் குற்றங்களுக்கு எதிராக திறம்பட தடுப்பதற்காக குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2013 இயற்றப்பட்டது.

மேலும், குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2018, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை உட்பட இன்னும் கடுமையான தண்டனை விதிகளை பரிந்துரைப்பதற்காக இயற்றப்பட்டது. கற்பழிப்பு வழக்குகளின் விசாரணையை 2 மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மேலும் இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் சட்டம் கட்டாயப்படுத்துகிறது.

Ajay Mishra

இதற்கிடையே அவசரகால பதிலளிப்பு ஆதரவு அமைப்பை அரசு தொடங்கியுள்ளது. இது அனைத்து அவசர நிலைகளுக்கும் ஒரே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எண் (112) அடிப்படையிலான அமைப்பை வழங்குகிறது. மேலும் கணினி உதவி மூலம் கள வளங்களை துயரத்தின் இருப்பிடத்திற்கு அனுப்புகிறது.

ஸ்மார்ட் காவல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்கு உதவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய எட்டு நகரங்களில் பாதுகாப்பான நகரத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like