மக்களுக்கு ஷாக் நியூஸ்! ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது..!

தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ளனர். அதன்படி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மார்ச் 19-ந் தேதி ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆட்டோ, டாக்சிகளின் பயன்பாடு அதிகமுள்ள இடமாக சென்னை உள்ளது. இந்நிலையில், வரும் மார்ச் 19ம் தேதி சென்னையில் தமிழ்நாடு ஆட்டோ கால்-டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்டோ, கால்-டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டிருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.