1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..! அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும்..!

1

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், 'ரிமால்' புயலாக வலுப்பெற்று, நேற்று "தீவிர புயலாக" வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேலும், வடக்கு திசையில் நகர்ந்து நள்ளிரவு, வங்காளதேச கேப்புப்பாராவிற்கும், சாகர்தீவிற்கும் இடையே, கரையை கடக்கக்கூடும்.

இதன்காரணமாக இன்று (27.05.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.28.05.2024 முதல் 01.06.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். வரும் 30.05.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like