வால்பாறையில் அதிர்ச்சி சம்பவம்..! சிறுமியை தாக்கி இழுத்துச் சென்ற சிறுத்தை..!

கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளன. அங்கு தேயிலை பறிப்பது உள்ளிட்ட பணிகளை நம்பி தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் வட மாநிலங்களான பீகார், ஜார்கண்ட் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந் தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் இங்கு குடிசை அல்லது கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனா்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை தேயிலை தோட்டத்தில் 6 வயது சிறுமி மீது சிறுத்தை தாக்குதல் நடத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை தோட்டத்தில் தாயுடன் சென்ற சிறுமி மீது திடீரென சிறுத்தை தாக்கி, சிறுமியை காட்டிற்குள் இழுத்துச் சென்றது.
அந்த சிறுமி, தனது தாயுடன் வீட்டின் வெளியே நின்று இருந்தாள். அப்போது சிறுமியின் தான் தண்ணீர் குடத்தை வீட்டிற்கு வைக்க சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் நின்ற நிறுமியை அங்கு வந்த சிறுத்தை ஒன்று தாக்கி உள்ளது. இதைக்கண்டு தாய் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள தொழிலாளர்கள் ஓடி வந்தனா். ஆனால் அதற்குள் சிறுத்தை சிறுமியை கவ்வி இழுத்து சென்றது. இதையடுத்து தொழிலாளர்கள் சிறுமி மற்றும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே வனத்துறைக்கு அவர்கள் தகவல் கொடுத்தனா். உடனே தகவலறிந்த போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடுதல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சிறுமி குறித்து தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் உள்ளவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சிறுத்தை மற்றும் யானை தாக்குதல் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6 வயது சிறுமி அப்ஸரா காத்துனும் இதே போன்று சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.