1. Home
  2. தமிழ்நாடு

சொர்க்கவாசல் திறப்பின் போது அதிர்ச்சி சம்பவம்! தர்மபுரியில் தலைகீழாக கவிழ்ந்த பெருமாள் சிலை..

Q

தமிழ்நாடு முழுவதும் வைணவ தளங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா... ரங்கா... கோஷங்களுக்கிடையே அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அதேபோல், பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பெருமாள் சிலையை பல்லாக்கு தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்தில் பல்லாக்கை வைத்துக் கொண்டு வேகமாக ஆடியுள்ளனர். அப்போது பெருமாள் சிலை எதிர்பாராத விதமாக தலைகீழாக கவிழ்ந்தது.

இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெருமாள் சிலையை தூக்கி பல்லாக்கில் வைத்து வலம் வந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like