1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! ஆன்லைனில் வாங்கிய ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்..!

1

நொய்டாவைச் சேர்ந்த தீபா தேவி என்பவர் ஆன்லைன் டெலிவரி தளத்தில் அமுல் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐஸ்கிரீமை திறந்த அவர் அதில் பூரான் ஒன்று உறைந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இந்த சம்பவம் ஆன்லைன் டெலிவரி தளத்திடம் அவர் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட ஆன்லைன் டெலிவரி தளம், அமுல் தரப்பில் இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

மேலும் ஐஸ்கிரீமிற்கான தொகையையும் அந்த ஆன்லைன்தளம் தீபாவிடம் திருப்பி வழங்கியுள்ளது. ஆனால் இந்த புகார் தொடர்பாக அமுல் நிறுவனத்திடமிருந்து தனக்கு எந்த தொடர்பும் வரவில்லை என்று தீபா தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்கிரீமில் பூரான் கிடந்த வீடியோவை தனது இணையதளப் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like