1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! இளம்பெண்ணை உயிரோடு எரித்த கொடூர கணவர்!

அதிர்ச்சி! இளம்பெண்ணை உயிரோடு எரித்த கொடூர கணவர்!


பீகார் மாநிலத்தில், ஒரு பெண் குழந்தை பெற்றுத்தரவில்லை என்பதற்காக பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடுமை அரங்கேறி உள்ளது.

பீகார் மாநிலத்தில் வசிக்கும் அல்பனா - கவுரவ் ஆகியோருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தடபுடலாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற கையோடு மணமக்கள் மகிழ்ச்சியாக வலம் வந்தனர்.

அதிர்ச்சி! இளம்பெண்ணை உயிரோடு எரித்த கொடூர கணவர்!

அவர்களது மகிழ்ச்சி கொஞ்சகாலமே நீடித்தது. காரணம், திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் குழந்தை பெற்றுத்தரவில்லை என கூறி அவரது கணவரும், உறவினர்களும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இது குறித்து அவ்வப்போது, அல்பனா தனது குடும்பத்தினருக்கு கண்ணீர் மல்க தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவர் வீட்டில் உச்ச கட்ட கொடுமைகளுக்கு ஆளான அல்பனா, தனது உயிருக்கு ஆபத்து என பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

பெற்ற மகளை காண ஓடோடி வந்த அவர்களை, அல்பனாவின் கணவரும், அவரது உறவினர்களும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ஒரு வழியாக போராடி வீட்டிற்குள் சென்றவர்ளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்திருந்தது.

அல்பனா எரிந்த நிலையில் சடலமாக கிடந்து கண்டு திடுக்கிட்டனர். பின்னர், ரத்த கண்ணீரோடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். உடனடியாக, களத்தில் இறங்கிய காவல்துறை விசாரணை நடத்தியதில், அல்பனா பெட்டோல் ஊற்றி எரிக்கப்பட்டதை உறுதி செய்தது. மேலும், அல்பானாவின் கணவர் கவுரவ் மற்றும் அவரது பெற்றோர்களையும் கைது செய்தது. அல்பனாவுக்கு ஏற்பட்ட இந்த கொடுமை அம்மாநிலத்தில் பெரும் சோக்ததை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like