1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! கடும் மன உளைச்சலில் சகாயம் ஐ.ஏ.எஸ்!?

அதிர்ச்சி! கடும் மன உளைச்சலில் சகாயம் ஐ.ஏ.எஸ்!?


அரசு நிர்வாகத்தில் இருந்து தன்னை விடுவித்தாலே போதும் என்ற மன நிலைக்கு சகாயம் ஐஏஎஸ் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, கொரோனா காலத்தில் பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில் சகாயம் ஐஏஎஸ்-ஐ மட்டும் ஒதுக்கி வைத்துள்ளனர் என்றும், அரசுச் செயலராக அவர் பதவி உயர்வு பெற்று 4 ஆண்டுகள் கடந்த நிலையில், அவருக்கு எந்த வேலையும் கொடுக்காமல் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அவருடயை ஜூனியர்களுக்கு சம்பளம் அதிகம். ஆனால் இவருக்கு சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வரை குறைவு என்று கூறப்படுகிறது. இது குறித்து மூன்று முறை நினைவூட்டியும் அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

பிரான்ஸ் தமிழ் கலாசார மன்றத்தின் 15-வது ஆண்டுவிழாவில் பங்கேற்க சகாயத்திற்கு அழைப்பு வந்த நிலையில், அவரை அலைக்கழித்து அதையும் தடுத்துவிட்டனர் என்று தெரிகிறது.

இதனால் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு சகாயம் ஐஏஎஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எல்லாம் கம்பீரமாக வலம் வரும் போது நேர்மையின் கம்பீரத்துடன் இருக்கும் சகாயம் ஐஏஎஸ் ராஜினாமா செய்வது ஏற்றுக் கொள்ளமுடியாதது என்பதே அறம் சார்ந்து சிந்திப்பவர்களின் கருத்தாக உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like