1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! கொரோனாவில் இருந்து மீண்ட 10இல் ஒருவருக்கு மீண்டும் தொற்று!!

அதிர்ச்சி! கொரோனாவில் இருந்து மீண்ட 10இல் ஒருவருக்கு மீண்டும் தொற்று!!


கொரோனா தொற்றுக்கு ஆளாகும் 10 நோயாளிகளில் ஒருவர் மீண்டும் தொற்று ஏற்பட்டு மருத்துமனைக்கு திரும்பும் சூழல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. தொற்று ஏற்பட்டு அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். தீவிர பாதிப்பு உள்ளவர்கள் ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொரோனா தொற்று ஏற்படும் 10 நோயாளிகளில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு வாரத்தில் மீண்டும் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் மருத்துமனை வருவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. அமெரிக்காவில் மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை 1,400 நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

Trending News

Latest News

You May Like