1. Home
  2. தமிழ்நாடு

அட்சய திருதியையில் அதிர்ச்சி..! ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை..!

1

இன்று அட்சய திருதியை என்பதால் மக்கள் தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் தங்கம் அதிகரிக்கும் என தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.இந்நிலையில் இன்று காலையே தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,250க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் சில மணி நேரங்களுக்குள்ளாக மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.90 உயர்ந்து ரூ.6,705 க்கு விற்பனையாகி வருகிறது.

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.காலை 6 மணிக்கு சவரனுக்கு 360 ரூபாயும், மீண்டும் காலை 9 மணிக்கு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்த நிலையில், மீண்டும் மதியம் 3 மணி அளவில் சவரனுக்கு 520 ரூபாயும் உயர்ந்துள்ளது.  இதன் மூலம் தங்கம் கிராமுக்கு ரூபாய் 6,770க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் இன்று ஒருநாள் மட்டும் சவரனுக்கு ரூபாய் 1,240 உயர்ந்துள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இதுவரை ரூ.1,240 உயர்ந்து ரூ.54,160க்கும், கிராமுக்கு ரூ.155 உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Trending News

Latest News

You May Like