1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் அதிர்ச்சி..! கல்லூரி மருத்துவமனை கழிவறையில் மாணவி சடலம்..!

Q

கோவை பீளமேடு பகுதியில், தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில், கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்தார்.

நேற்று காலை அவர், மருத்துவமனை கழிவறையில் சடலமாக கிடந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பவபூரணியின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய காரணம் என்னவென்று நிர்வாகம் கூற மறுப்பதாகவும் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். 

Trending News

Latest News

You May Like