1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு கொரோனா உறுதி!

அதிர்ச்சி! 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு கொரோனா உறுதி!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,12,585 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,181 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98,678 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 85,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 52,73,202 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 9,40,705 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 14,23,052 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 7,56,19,781 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like