அதிர்ச்சி! பிரபல வங்கியின் 50 கிளைகளுக்கு மூடு விழா! ஏடிஎம் மையங்களும் குறைகிறது!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் பொருளாதாரம் பெருமளவு சரிந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. மேலும் சில நிறுவனங்களை மூடி வருகின்றன. அந்த வகையில் Yes Bank நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தங்களது வங்கியின் 50 கிளைகளை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்தகவலை வங்கியின் தலைமை நிர்வாகி உறுதி செய்துள்ளார்.
மேலும் இப்போதைக்கு புதிய கிளைகளும் திறக்கப்பட மாட்டாது எனவும், தொடர்ந்து இயங்கி வரும் மற்ற கிளைகளிலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இயக்க செலவுகளில் 21 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் வங்கிகளையும் அதன் செலவினத்தில் 20 சதவிகிதம் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். அடுத்த நிதியாண்டான 2022ல் இந்த நிலை மாற்றியமைக்கப்பட வாய்ப்புக்கள் உருவாகும். அப்போது வங்கிக்கிளைகள் விரிவாக்கம் செய்யப்படும். டிஜிட்டல் பயன்பாடுகளை அதிகரிக்கவும், கிளைகளைச் சாரா வாடிக்கையாளர்களை பெருக்கவும் வங்கி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.