1. Home
  2. தமிழ்நாடு

டீக்கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! ஆவின் பால் பாக்கெட்டில் புழு..!

1

ஆவின் பால் பாக்கெட்டுகளை தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன.  

இந்நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி பாலை சூடு செய்வதற்காக பாத்திரத்தில் கொட்டியுள்ளார். அப்பொழுது பால் முழுவதும் வெள்ளை புழுக்கள் மிகுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி பாக்கெட் மட்டும் பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அந்த பாக்கெட்டை சோதனை செய்த பொழுது பாக்கெட் ஆனது இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

மேலும், இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கையில், நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த எண் கொண்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், தொடர்ந்து இதனை அடுத்து ஆய்வு அறிக்கை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
    

Trending News

Latest News

You May Like