1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி !! 5 மாத ஆண் சிசுவை , ரோட்டில் வீசி சென்ற கொடூரம் !! சிசிடிவி காட்சிகள் ஆய்வு

அதிர்ச்சி !! 5 மாத ஆண் சிசுவை , ரோட்டில் வீசி சென்ற கொடூரம் !! சிசிடிவி காட்சிகள் ஆய்வு


சென்னை பெரம்பூர் ராகவன்  சாலை  பகுதியில் குப்பை தொட்டி ஒன்றில் 5 மாத ஆண் கரு சிசு ஒன்றை அட்டை பெட்டியில் வைத்து யாரோ வீசி சென்றுள்ளனர். அதனை அந்த பகுதியில் இருந்த நாய் ஒன்று சாலையில் இழுத்து போட்டுள்ளது.

அதிர்ச்சி !! 5 மாத ஆண் சிசுவை , ரோட்டில் வீசி சென்ற கொடூரம் !! சிசிடிவி காட்சிகள் ஆய்வு

அதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருவிக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்து போலீசார் 5 மாதமே ஆன ஆண் கரு குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஐந்து மாதமே ஆன  சிசு கருவை குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

5 மாதமே கருவில் இருந்த  பச்சிளிம் சிசு  சாலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதே போல கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பெரம்பூர் ரெயில் நிலையம் தலைப்பகுதி எரிந்த நிலையில் 6 மாத பெண் சிசு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  பெரம்பூர் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைப்பெற்றது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

Newstm.in

Trending News

Latest News

You May Like