1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! 21 வயது பி.இ. பட்டதாரி பெண் தலைமையில் கொள்ளை!!

அதிர்ச்சி! 21 வயது பி.இ. பட்டதாரி பெண் தலைமையில் கொள்ளை!!


பி.இ. படித்துள்ள பட்டதாரி பெண் ஒருவர் ஃபேஸ்புக் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வேலு நகர் குடியிருப்பைச் சேர்ந்த பூமிகா என்ற 21 வயது பெண் தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார்.  அவர் பி.இ. படித்துள்ளார். பூமிகா அதே குடியிருப்பை சேர்ந்த பார்த்திபன், ஷர்மிளா தம்பதியிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பார்த்திபன் வேலைக்கு சென்றுவிட்டதை அடுத்து சர்மிளா வீட்டில், பூமிகா பேசிக்கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து சர்மிளா மற்றும் பூமிகாவை தாக்கி, அவர்கள் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலிசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, கொள்ளைச் சம்பவம் குறித்து பக்கத்து வீட்டுப்பெண் பூமிகா அளித்த வாக்குமூலம் போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது போலீஸாருக்கு பொறி தட்டியது.

கொள்ளை நடந்த அன்று 5 நபர்களுடன் பூமிகா தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தது அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து பூமிகாவிடம் போலீசார் விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.

படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்த பூமிகா சொகுசாக வாழ ஆசைபட்டு தனது பேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதற்காக பக்கத்துவீட்டுப் ஷர்மிளாவிடம்  உள்ள நகைகள் குறித்தும் முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்த பூமிகா அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்.

இதற்காக பெங்களூரில் உள்ள தனது பேஸ்புக் நண்பரான பிரசாந்த்திடம் பேசி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினார். இதைத் தொடர்ந்து பூமிகா, பிரசாந்த் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த சஞ்சய், புட்டராஜு, கிரண், நாகராஜ் ஆகிய 6 பேரையும் சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like