1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!!

அதிர்ச்சி! இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!!


சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் (25) என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தனது தாயைப் பார்ப்பதற்காக சண்முகபுரத்திற்கு வந்திருக்கிறார்.

அப்போது அவரை 4 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. இதையடுத்து இளைஞரின் தாயார் லதா அம்பத்தூர் காவல்நிலையத்தில் தனது மகனை கடத்திச்சென்றதாக புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் கடத்திச்சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது உதயகுமாரை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதிர்ச்சி! இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!!

போலீசார் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உதயகுமாரை 9 பேர் கொண்ட கும்பல் ஓடஓட சரமாரியாக தலை, முகத்தில் வெட்டி படுகொலை செய்யும் காட்சிகள் கிடைத்துள்ளது.

கொலை தொடர்பாக சரண், அப்புன், மாரிஸ் பிரான்க்ளின், எலியா, வினோத் குமார் உள்பட 9 பேரை கைதுசெய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதிர்ச்சி! இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!!

அதில் கடந்த வாரம் உதயகுமாரின் நண்பர் ஜீவாவை அதே பகுதியைச் சேர்ந்த எலியா, மோசஸ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதை இவர் தட்டிக் கேட்டதால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த 9 பேரும் உதயகுமாரை கடத்திச்சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like