1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளியின் தாளாளர்!!

அதிர்ச்சி! மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளியின் தாளாளர்!!


திருச்சியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளியின் தாளாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார். அந்த பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவ, மாணவியர்களுக்கான விடுதி செயல்படுகிறது. அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவருக்கு ஜேம்ஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி காவல் துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் உறையூர் காவல் நிலையத்தில் வைத்து ஜேம்ஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அதிர்ச்சி! மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளியின் தாளாளர்!!

அங்கு விசாரணைக்கு பின் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து கல்வி துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே திருச்சி மகிளா நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ஜேம்ஸை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பாலியல் புகாரை அடுத்து ஜேம்ஸை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like