1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! தந்தை கண் முன்னே மகன் கொடூரமாக வெட்டிக் கொலை!!

அதிர்ச்சி! தந்தை கண் முன்னே மகன் கொடூரமாக வெட்டிக் கொலை!!


சென்னையை அடுத்து நெற்குன்றத்தில் தந்தை கண்முன்னே மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெற்குன்றம் பகுதியை சேர்ந்த நாராயணன் (23) என்ற இளைஞர் இரவு நேரம் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அவரிடம் தகராறு செய்தனர்.

அப்போது நாராயணனின் தந்தை வீட்டு மாடியில் இருந்து கீழே வருவதற்குள் அந்த கும்பல், இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

உடனடியாக மகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தனஞ்செயன் என்பவருக்கும் நாராயணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன்பு நாராயணன் தனது நண்பர்களுடன்சேர்ந்து தனஞ்செயன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரை கத்தியால் வெட்டியுள்ளார்.

அதற்கு பழிவாங்கும் விதமாக தனஞ்செயனும் அவரது கூட்டாளிகளும் நாராயணனை வீட்டுக்கு அருகே வைத்து கொலை செய்துள்ளனர்.

கொலை தொடர்பாக சாரதி (19), செல்வா (19) உட்பட 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள தனஞ்செயன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like