1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி..! நிலநடுக்கத்திற்குப் பின் பாலியல் துன்புறுத்தல் கட்டாயத் திருமணம்.!

1

மொராக்கோவில் கடந்த  செப்.8-ம் தேதியன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில்  ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த நிலையில், ஆதரவற்ற இளம் பெண்கள் தங்களைக்  காத்துக் கொள்ளும்  பொருட்டு, கிராமப் பகுதிகளுக்கு படையெடுக்கின்றனர். சமூக ஊடகங்களில் ஆண்கள் பலர், ஆதரவற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்ள தயார் என விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல்  செய்யும் நோக்கில் பயணப்படுவதாக குறிப்பிட்ட 20 வயது மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இப்படியான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மகளிர் அமைப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன. சிறார்கள் பலர் ஆபத்தான சூழலில் சிக்காமல் இருக்க, மொராக்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்பு அளிப்பதாக கூறி, வேறு நாடுகளுக்கு சிறார்களை கடத்தும் செயலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

நிலநடுக்கத்திற்கு பிறகு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு சம்பவங்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. அப்படியான சூழலில் சிக்கும் சிறார்கள் அல்லது பெண்களுக்கு ஆலோசனை அல்லது சேவையை வழங்கும் அமைப்புகள் ஏதும் மொராக்கோவில் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மொராக்கோவை நோக்கி தங்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like