1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி..!ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி..!

Q

அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி நாடு திரும்பும் வழியில் கடும் பனிமூட்டம் காரணமாக அவர் பயணித்த ஹெலிகாப்டர் மலை முகடுகளுக்கு நடுவே சிக்கி நொறுங்கி விபத்திற்கு உள்ளானது.
மேலும் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்தது. விபத்திற்கு உள்ளான ஹெலிகாப்டரில் அதிபருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 8 பேர் பயணித்து உள்ளனர். விபத்து நடைபெற்ற ஈரானின் ஜோல்பா பகுதியில் கடுமையான மழை மற்றும் பனிமூட்டம் நீடித்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த விவகாரம் உலக நாடுகளின் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், துருக்கி உட்பட சர்வதேச நாடுகள் மீட்பு பணியில் உதவி கரம் நீட்டின. அதிபரின் ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளான தகவலை அறிந்து அந்நாட்டு மக்கள் பொது இடங்களில் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீப்பிடித்து எரிந்த நிலையில் ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் அதிபரோடு பயணித்த வெளிவரவு அமைச்சர் உட்பட 8 பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like