1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி..! மதுபான ஆலையில் இருந்து 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு..!

1

பச்பன் பச்சாவ் அந்தோலன் (பி.பி.ஏ.) என்று அழைக்கப்படும் தன்னார்வ நடவடிக்கை சங்கத்துடன் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து மத்திய பிரதேசத்தில் உள்ள சோம் என்கிற மதுபான ஆலையில் சோதனை மேற்கொண்டது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு, மதுபான ஆலையில் இருந்து 58 குழந்தைகள், 19 பெண்கள் மற்றும் 39 ஆண் குழந்தைகளை மீட்கப்பட்டுள்ளதாக  பி.பி.ஏ. என்ற தன்னார்வ அமைப்பு  தெரிவித்துள்ளது.

மேலும் தொழிற்சாலையில் நடந்த சோதனை தீவிரமான விஷயம். தொழிலாளர், கலால் மற்றும் காவல் துறைகளில் இருந்து விரிவான தகவல்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like