பாலியல் தொல்லை..! இளைஞருக்கு 7 ஆண்டு சிறை? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜார் அலி. இவர் அதே பகுதியில் உள்ள 12 வயது சிறுவனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நிஜார் அலி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
நிஜார் அலி மீதான பாலியல் புகார் வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இளைஞர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து குற்றவாளியை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச்சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
newstm.in