1. Home
  2. தமிழ்நாடு

ஒரே பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் சிக்கிய மற்றொரு ஆசிரியர் !

ஒரே பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் சிக்கிய மற்றொரு ஆசிரியர் !


பரமக்குடி அருகே அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்த செய்திகள் அவ்வவ்போது வெளிவந்து அதிர்ச்சி அளிக்கிறது. வேலியே பயிரை மேய்வது போன்று ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவமும் நடந்து வருகிறது.

அந்த வகையில் பரமக்குடி அருகே அரசு பள்ளி ஒன்றில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ஒரே பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் சிக்கிய மற்றொரு ஆசிரியர் !

அதாவது, ராமநாதபுரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியரான ராமராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மாணவிகளை தகாத முறையில் தொட்டதாகவும் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் ராமராஜ் கைது செய்யப்பட்டார்.

newstm.in

Trending News

Latest News

You May Like