1. Home
  2. தமிழ்நாடு

சுற்றுலாப் பயணிகளை ஈ போல் மொய்க்கும் பாலியல் தொழிலாளிகள்!



ரயில் நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை தொந்தரவு செய்து அழைத்த பாலியல் தொழிலாளிகள் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரயில் நிலையத்தில் பாலியல் தொழிலாளிகள் ஆறு பேர் அங்கு வரும் பயணிகளை அழைத்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸாருக்கு தொடர்ந்து புகார் சென்றதை அடுத்து தனிக்குழு அமைக்கப்பட்டது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக உள்ளூர் இளைஞர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கூப்பிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆறு பாலியல் தொழிலாளிகளை தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

சுற்றுலாப் பயணிகளை ஈ போல் மொய்க்கும் பாலியல் தொழிலாளிகள்!

கைது செய்த பெண்களை சிறைகக்கு அனுப்பாமல் இதைத் தொடர்ந்து, ஒரு போலீஸ் குழு அந்த இடத்தை போலீசார் கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். விபச்சாரம் என்பது சட்டத்தின் படி குற்றமல்ல என்று பம்பாய் உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்குப் முன்பு தீர்ப்பளித்தது.

வயது வந்த பெண்களுக்கு தங்கள் தொழிலைத் தேர்வுசெய்ய உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் கூறியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண்கள் ஆலோசனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like