1. Home
  2. தமிழ்நாடு

40-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு..!

1

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூன் 19 (நேற்று) புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை ஜூன் 25 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 40-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like