1. Home
  2. தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 13ஆவது முறையாக நீட்டிப்பு!

1

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில்,கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போது புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (டிச.15) நிறைவடைந்த நிலையில், சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 04- ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 13ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like