1. Home
  2. தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 32 முறையாக நீட்டிப்பு!

1

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனா்.இந்த நிலையில்,  செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 15(இன்று) திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புழல் சிறையிலிருந்து காணொளிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் 32-ஆவது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது..

Trending News

Latest News

You May Like