செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b26cceb27f728d9c86fffa26fd4dc497.jpg?width=836&height=470&resizemode=4)
கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரபட்டியில் உள்ள வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 15ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் 19வது முறையாக அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.