1. Home
  2. தமிழ்நாடு

டெல்லியில் பரபரப்பு..! திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

1

புது டெல்லி உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து புகார்கள் எழுந்தன. இந்த சூழலில் அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையம் மற்றும் பள்ளிகளைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது.

இதைதொடர்ந்து, டெல்லி போலீசார் சிறைக்குள் சோதனை நடத்தினர், ஆனால் வெடிகுண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இது வெறும் புரளிதான் என்பது தெரிய வந்தது. இருந்த போதிலும், இந்த மிரட்டல் குறித்து டெல்லி காவல்துறைக்கு சிறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே வேளையில் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட சில முக்கிய கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்குள் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதுடன், தீவிர பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமாக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Trending News

Latest News

You May Like