சென்னையில் பரபரப்பு..! புதிய வாஷிங் மெஷினை ஷோரூம் வாசலிலேயே எரிக்க முயன்ற பெண்
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/81c139c879534755236bf261a9c0a5dc.png?width=836&height=470&resizemode=4)
சென்னையை சேர்ந்தவர் லாவண்யா.தனியாக வசித்து வரும் இவர், சிறுக சிறுக பணம் சேர்த்து, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோ ரூமிலிருந்து வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியிருக்கிறார். ஆனால், வாங்கியதிலிருந்து அந்த வாஷிங் மெஷின் அடிக்கடி பழுதாகி பழுதாகி ஓடாமல் நின்றிருக்கிறது. சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட சர்வீஸ் செய்தும் வாஷிங் மெஷின் முழுதாக சரியாகவில்லை என தெரிகிறது.
எத்தனை முறை சர்வீஸ் செய்தாலும் மீண்டும் மீண்டும் பழுதாவதால் எனக்கு ஒரு தீர்வு கேட்டுள்ளார் இல்லையென்றால் இதை மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர்கள், மீண்டும் சர்வீஸ் வேண்டுமானால் செய்து கொடுக்கிறோம். மாற்றியெல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளனர்.
இதனால கடும் மன உளைச்சலுக்கு ஆளான லாவண்யா, கடை வாசலில் வைத்தே வாஷிங் மிஷின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி எரிக்க முயன்றார்.இதனை அறிந்து விரைந்து வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
மேலும், வாஷிங்மிஷினை மாற்றித் தர ஷோ ரூம் மேலாளரிடம் அவர்களும் கேட்டுள்ளனர். அதற்கும் அவர் மறுப்பு தெரிவிக்க, வாஷிங்மிஷினை கடை வாசலிலேயே போட்டுவிட்டு, லாவண்யா புறப்பட்டுச் சென்றார். 10 ஆண்டுகள் வாரண்டி இருப்பதாக கூறப்படும் வாஷிங்மிஷின் பழுதாகி நின்றதை பார்த்தபோதெல்லாம் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்த லாவண்யா, வாஷிங் மெஷின் செலவை மருத்துவ செலவுக்கு போனதாக நினைத்துக் கொள்வதாக வேதனை தெரிவித்தார்.