செங்கல்பட்டில் பரபரப்பு..! ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்..!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேறு குற்றவாளி அசோக் (வயது 28). இவர் மீது இரட்டை கொலை உள்ளிட்ட நான்கு கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் விசாரணைக்காக கடந்த சில நாட்களாக அசோக் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
சிங்கப்பெருமாள் கோயில் அருகேயுள்ள ஆப்பூர் வனப்பகுதியில் அசோக் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனப் பகுதியில் காவல் துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அசோக்கை நெருங்கும் போது அதனை அறிந்த அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
தப்ப முயன்ற ரவுடி அசோக் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். அதில் வலது காலில் குண்டு காயம் அடைந்த அசோக், சுருண்டு விழுந்துள்ளார். அவரை பிடித்த காவல் துறையினர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.