இனி திருப்பதியில் 30 நிமிடத்தில் மூத்த குடிமக்கள் இலவச தரிசனம் செய்யலாம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f702f2c119a7186506e82a69fbce4368.jpg?width=836&height=470&resizemode=4)
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மூத்த குடிமக்கள் இலவச தரிசனத்திற்காக தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணிக்கு 2 இடங்களை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் இந்த வசதிக்கு தகுதியுடையவர்கள்.மூத்த குடிமக்கள் 30 நிமிடங்களுக்குள் சாமி தரிசனம் செய்ய முடியும்.
மூத்த குடிமக்கள் தரிசனம் செய்யும் போது மற்ற அனைத்து வரிசைகளும் நிறுத்தப்படும், இதனால் மூத்த குடிமக்கள் அமைதியான மற்றும் தொந்தரவு இல்லாத தரிசனத்தை பெற முடியும்.
மூத்த குடிமக்கள் கவுண்டரை அடைய பார்க்கிங் பகுதியில் இருந்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை செய்துள்ளது. இந்த தரிசனத்திற்கு தகுதிபெற, ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் வயது சான்றிதழை சமர்ப்பித்து, அதை எஸ்-1 கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தரிசனத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் அடையாள சான்றுடன் தட்சிண மட தெருவில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு அருகில் உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்ய வேண்டும்.
தரிசனத்தின் போது அவர்களுக்கு தயிர் சாதம் மற்றும் சூடான பால் இலவசமாக வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.