1. Home
  2. தமிழ்நாடு

துப்பாக்கியை தலையில் வைத்து செல்ஃபி.. செல்போன் பட்டனை அழுத்த துப்பாக்கியை அழுத்தியதால் விபரீதம் !

துப்பாக்கியை தலையில் வைத்து செல்ஃபி.. செல்போன் பட்டனை அழுத்த துப்பாக்கியை அழுத்தியதால் விபரீதம் !


பீகார் மாநிலம் கோபாலகாஞ் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் குடும்பத்துடன் வசித்து வருகிறான். சிறுவன் கடந்த வாரம் பொறியியல் படிப்புக்கான ஜெஇஇ நுழைவுத் தேர்வு எழுத்தியிருந்தார்.

இந்நிலையில், வீட்டில் சிறுவன் துப்பாக்கி பிடித்தபடி செல்ஃபி எடுக்க முயன்ற போது தவறுதலாக ட்ரிகரில் கைப்பட்டு அழுத்தி குண்டு வெடித்தது. இதில் தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் தற்கொலை செய்துக்கொண்டதாக குடும்பத்தினர் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கியை தலையில் வைத்து செல்ஃபி.. செல்போன் பட்டனை அழுத்த துப்பாக்கியை அழுத்தியதால் விபரீதம் !

அதாவது ஜெஇஇ நுழைவுத் தேர்வை சரிவர எழுதவில்லை என சில நாட்களாக மனம் வருந்திய நிலையில் காணப்பட்டதாகவும், அதன்காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் சிறுவனின் குடும்பத்தினர் சொன்னதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இது விபத்தாக நடந்ததா? அல்லது தற்கொலையா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் சிறுவனுக்கு துப்பாக்கி கிடைத்தது குறித்தும் விசாரணை நடத்துகின்றனர்.
 

newstm.in 

Trending News

Latest News

You May Like