1. Home
  2. தமிழ்நாடு

சிஎஸ்கே வீரர்களையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர கலாய்த்த ஷேவாக்!

சிஎஸ்கே வீரர்களையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர கலாய்த்த ஷேவாக்!


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.

ஐபிஎல் 21ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.கடைசி ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 3 பந்துகளில் கேதர் ஜாதவ் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

கடைசி 3 பந்துகளில் ஜடேஜா சிக்ஸரும், 2 பவுண்டரியும் அடித்து ஆறுதல் அளித்தார். இதனால் கேதர் ஜாதவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் சென்னை அணியின் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

168 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான் என்று கூறிய அவர் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடினார்கள் என்று தோன்றுவதாக கூறியுள்ளார்.

என்னை பொருத்தவரையில் அந்த அணியில் சில வீரர்கள் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் போல் கடமைக்கு விளையாடி வருகிறார்கள் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் சரியாக வந்துவிடும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என ஷேவாக் கிண்டலாக சுட்டிக் காட்டியுள்ளார்.ஒரு சேர சிஎஸ்கே வீரர்களையும், அரசு ஊழியர்களையும் கலாய்த்துள்ளார் சேவாக்.

newstm.in

Trending News

Latest News

You May Like