1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலைக்கு சீமான் கேள்வி : இந்தி எதற்காக தேவை? எதற்காக இந்தி எனக்கு தேவை என்பதற்கான ஒரு காரணம் சொல்லுங்கள்...

1

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு:


மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு பதில்:- இதனை கடை பிடித்தால் தான் நிதியை ஒதுக்கி தருவோம் என்பது அது எந்த மாதிரியான மனப்போக்கு, எப்படிப்பட்ட தலைமை என்பதை பார்க்க வேண்டும். இது எப்படி ஒரு ஜனநாயகமாக இருக்கும். இதை செய்ததால் தான் தருவேன் என்பது எப்படி சரியாக இருக்கும். 
 

உங்கள் பணத்தைக் கேட்கவில்லை மாநிலங்கள் கொடுக்கின்ற வருவாயின் பெருக்கம் தான் மத்திய அரசு நிதி. இந்திய அரசுக்கு என்று வருவாய் பிறப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா மாநிலங்கள் கொடுக்கின்ற வருவாய் பெருக்கம் தான் உங்களுக்கு நிதி வளமை அந்தந்த நிலங்களுக்கு புதுமைப் படுத்தி பிரித்து கொடுக்க வேண்டியது தான் அரசின் கடமை. அதற்கு தான் பொது அமைப்பாக அரசு என்பதை வைத்திருக்கிறோம். அதை நீங்கள் வைத்துக் கொண்டு இதை செய்தால் தான் தருவோம் என்பது கொடுங்கோன்மையாகும் இது ஏற்கத்தக்கது அல்ல.


மத்திய திட்டத்தை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வது எப்படி ஜனநாயகம் ஆகும். உங்கள் காசை கேட்கவில்லை. மாநிலங்களின் நிதி வருவாயின் பெருக்கம்தான் இந்திய ஒன்றிய அரசின் நிதி. இந்திய அரசுக்கு என்று வருவாய் பெருக்கத்திற்கு ஏதாவது வழி உள்ளதா? மாநிலங்கள் தரும் வரி வருவாயின் பெருக்கம்தான் நிதி வளமை. இதை செய்தால்தான் நிதி தருவோம் என்று சொல்வது கொடுங்கோன்மை. இந்தி கட்டாயமாக கற்க வேண்டும் என்ற அவசியம் ஏன்?, நாட்டில் உள்ள ஏழ்மை, வறுமை, பசி, பட்டினி, வேலை இன்மை எல்லாத்திற்கும் ஒரே மருந்து இந்தி கற்பதுதானா?, இந்தியை ஏன் வலிந்து திணிக்கிறீர்கள். கல்வியை பொதுப்பட்டியலுக்கு சென்றதால்தான் இந்த பிரச்னை. மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்.,

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே மும்மொழிக் கொள்கை உள்ளதாக அண்ணாமலை விமர்சித்து உள்ளாரே?

பைத்தியக்காரத்தனம். அண்ணமலை ஐபிஎஸ் படித்தது போதாது எங்கள் வரைவு அறிக்கையை நன்றாக படிக்க வேண்டும். அதில் கொள்கை மொழி தமிழ், பயன்பாட்டு மொழி ஆங்கிலம் என்று போட்டு உள்ளோம். உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழி இந்தி உட்பட என்று போட்டு உள்ளோம். முதலில் அவர் தமிழனாக இருந்து பேச வேண்டும். இந்தி எனக்கு எதற்காக தேவை.,வடஇந்தியாவில் பணி செய்ய சென்றால் இந்தியை தேவை கருதி கற்றுக் கொள்ளப்போகிறோம். இந்தி படி என்று சொல்லும் அண்ணாமலை, தமிழ் படிக்க பள்ளிக் கூடம் வைக்கவில்லையே. என்னை கேள்வி கேட்கும் அண்ணாமலையின் பிள்ளைகள் எங்கு படிக்கிறது. இங்கு பள்ளிக் கூடம் சுடுகாடாகத்தான் உள்ளது. சீமான் மகன் எங்கு படித்தால் உனக்கு என்ன? இந்தி தெரிந்தால்தான் இந்த நாட்டில் வாழ முடியும் என்று சொல்வதை ஏற்க முடியாது.

அண்ணாமலையை பார்த்து நேருக்கு நேர் கேட்கிறேன்.. இந்தி எதற்காக தேவை .. எதற்காக இந்தி எனக்கு தேவை என்பதற்கான ஒரு காரணம் சொல்லுங்கள்...  இந்தியை படித்தால் தான் தேசம் ஒற்றுமையாக இருக்கும் என்றால் என் தாய் மொழியை கொன்றுவிட்டு செய்வது இது ஒரு தேச துரோகம். அண்ணாமலை ஒரு தமிழனாக இருந்தால் இதை உணர்த்திருக்க வேண்டும்.
 

தமிழ்நாட்டில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளின் படிக்கிறார்களா... அரசு பள்ளிகளில் சுடுகாடு போல் உள்ளது... திட்டமிட்டு தமிழ் மொழியை அழித்து வருகிறார்கள். 


அப்பா என்று அழைக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி உள்ளாரே?அப்பா என்றால், இப்படி பண்ணிட்டீங்களே அப்பா என்று சொல்லி இருப்பார்கள். அவரையும், அவரது கட்சிக்காரர்களையும் தவிர வேறு யாராவது ஒருவரை நல்லாட்சி நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள். பள்ளிக்கரணை ஏரியை ஆக்கிரமித்து அரசு குப்பை மேடாக்கி உள்ளது. நல்லாட்சி என்று சொல்பவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? அப்பா என்பதை அடையாளமாக மாற்ற நினைக்கிறார்; அப்பா என்பதை குறியீடாக மாற்ற நினைக்கிறார். அப்பா என்பவர் எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் ஆனால் குடிக்க வைக்க கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட மனைவிக்கு யார் அப்பா ? மயிலாடுதுறை இரண்டு பிள்ளைகள் பிறந்தவர்களுக்கு யார் அப்பா ? இப்படிப்பட்ட அப்பாவை பார்க்கும் போது என்னப்பா இப்படி பண்றீங்க என்று கேட்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like